Sunday, December 26, 2010

WiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்

தற்காலத்தில் Wireless Network மிகவும் பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பழைய முறையான Wired Network-கை காட்டிலும் இது சுலபமான முறையாகும். Installation and Configuration போன்றவை மிகவும் சுலபமாக செய்யலாம்.

இந்த Wireless Network - WiFi அல்லது 802.11 Network என அழைக்கப்படுகிறது. கீழ்கண்ட படம் ஒரு WiFi Network - ஐ விளக்குகிறது,



Wireless Network-ஆனது, TV, Radio மற்றும் Cell Phones போல Radio Waves எனப்படும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி வேலை செய்கிறது. இதை தொழில்நுட்ப சொல்லில் Two Way Radio Communication என அழைக்கலாம். இதன் தகவல் எல்லை 100 Meters வரை இருக்கும்.

ஒரு கம்ப்யூட்டரில் உள்ள Wireless Network Adapter அருகில் உள்ள Wireless Access Point- உடன் எப்பொதும் தொடர்பில் இருக்கும், அது Computer Signal-களை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக Wireless Access Point அல்லது Router-க்கு அனுப்பி வைக்கிறது, பின்னர் Router ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) பின் internet-உடன் தொடர்பு கொள்கிறது. அதேபோல், Internet- இல் இருந்து தகவல்களை பெற்றபின் அதை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக கம்ப்யூட்டரின் Wireless Network Adapter-க்கு அனுப்பிவைக்கிறது. Wireless Network Adapter ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) திரையில் நமக்கு காண்பிக்கப்படுகிறது.

இந்த Radio Signal, மற்ற Radio Signal-களைவிட முற்றிலும் வேறுபட்டது, இதன் அலைவரிசை 2.4 GHz - 5 GHz ஆகும், இது மற்றவற்றைவிட கூடுதல் ஆகும், இந்த கூடுதல் அலைவரிசை அதிகபடியான தகவல்களை Transmit செய்ய உதவுகிறது. கீழ்கண்டவை 802.11 Network Standard-ன் வகைகள் ஆகும் ;

802.11a - இதன் அலைவரிசை 5 GHz வரை, வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது. இது orthogonal frequency-division multiplexing
(OFDM)  என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.

802.11b - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, வினாடிக்கு 11 Mbps வரை மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இது complementary code keying
(CCK) modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

802.11g - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, ஆனால் வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இதுவும் orthogonal frequency-division
multiplexing (OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

802.11n - இதுவும் 802.11g Network போலேதான், ஆனால் இதன் வேகம் 802.11g - ஐ விட மூன்று மடங்கு அதிகம், தோராயமாக 140 Mbps. இது Multiple Input, Multiple Output
(MIMO) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

பொதுவாக நாம் பயன்படுத்தும் Wireless Network - க்கு ஒரு பெயர் உண்டு, அதை - SSID (service set identifier ) எனபர். பொதுவாக இது Wireless Router - இன் தயாரிப்பாளரின் பெயரிலேயே இருக்கும், வேண்டுமானால் இதை நாம் மாற்றி கொள்ளலாம். ஒவ்வரு Wireless Router-க்கும் ஒரு Channel இருக்கும், இந்த Channel - ன் அடிபடையிலேயே தகவல் பறிமாற்றம் நடைபெறும். ஒருவேளை நாம் இரண்டு Wireless Router-களை பயன்படுத்தினால் இரண்டிற்கும் வேறு வேறு Channel-களை பயன்படுத்தவேண்டும், இல்லையென்றால் தகவல் பறிமாற்றத்தில் சில குறைபடுகள் ஏற்படும்.

மற்றும், நம்முடைய Wireless Router - களை Secure Mode - லேயே Configure செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் வெளியார்கள் நம்முடைய Network-ஐ தவறாக உபயோகிக்கக்கூடும்.

WiFi Protected Access - WPA, Wired Equivalency Privacy - WEP போன்றவை Wireless Security -ன் சில வகைகள் ஆகும்.

 தகவல்:தகவல் தொழில்நுட்பம்

தமிழ் பட தீம் மியூசிக் ரிங்டோன்கள்

Airtel.mp3
Alaipayuthey-endrendrum....mp3
anil kapoor theme.mp3
annian - stranger in black (theme).mp3
BABA MUSIC.mp3
BABA_THEME_MUSIC_EKAMEVADVI.MP3
BOMBAY THEME.mp3
climax music.mp3
DUET-MUSIC.mp3
Duet.mp3
Impossible Theme(Accomplished)-Adam Glayton & Larry Mullen.mp3
Jeans.mp3
Jeans1.mp3
kaadhal kandean_Theme music.mp3
kaadhal konden-theme.mp3
kaadhal konden-theme.mp3.mp3
kadalkonden.mp3
Kai Padaamale - Bit - Ranjith.mp3
mangalyam.mp3
maru murai.mp3
minal.mp3
Minnale-Poopol.mp3
Minnale.mp3
Minnale4.mp3
Misic Of Joy-Enna Vazhkkai-Yuvan Shankar Raja..mp3
ni sa ri sa.mp3
Padayappa.mp3
punnagayil thee mooti.mp3
Ram Ram.mp3
RATCHAGAN Theme Music.mp3
Ricky Martin - Ae Ole Ale.mp3
Ricky Martin - Livin La vida loca.mp3
Roja-5.thamizha thamizha.mp3
Theme Music.rar
Thottijaya THEME MUSIC.mp3

http://www.mediafire.com/file/9b8stt71f9n61f7/Theme%20Music.rar

கம்ப்யூட்டர் தியேட்டர் "விண் ஆம்ப்"

விண் ஆம்ப்(Winamp)



வீட்டினுள் தியேட்டரையும், ஆடியோ அரங்கையும் கொண்டு வந்ததில் வீடியோ பிளேயருக்கு அடுத்தபடியாகக் கம்ப்யூட்டரைச் சொல்ல வேண்டும். இதற்கு அதிகம் பயன்படும் சாப்ட்வேர் தொகுப்பு விண் ஆம்ப் ஆகும். விண்டோஸ் இயக்கத் தொகுப்புடன் மீடியா பிளேயர் என்ற ஆடியோ, வீடியோ தொகுப்பு கிடைத்தாலும், பெரும்பாலானவர்கள் இன்றும் விண் ஆம்ப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொகுப்பு கட்டணம் கட்டியும் பெறலாம் என்றாலும், இலவசமாக டவுண்லோட் செய்யக் கூடிய தொகுப்பிலேயே பல வசதிகள் இருப்பது இதற்குக் காரணமாகும்.

விண் ஆம்ப் புரோகிராமை மீடியா பிளேயர் என வகைப்படுத்துகிறோம். இங்கு மீடியா என்பது ஆடியோ மற்றும் வீடியோவினைக் குறிக்கிறது. இது இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம் என்பது இதன் சிறப்பு. இதனை www.winamp.com என்ற இணைய தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். மேலும் சில தளங்களும் இந்த புரோகிராமை இறக்கிக் கொள்ள உதவுகின்றன. எடுத்துக்காட்டாக www.download.com என்ற தளத்தைக் கூறலாம். இந்த தளம் சென்று Get Basic என்ற இடத்தில் கிளிக் செய்து பின் எந்த அளவில் வேண்டும் என்பதில் Full என்பதைத் தேர்ந்தெடுத்தால் முழு புரோகிராமும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்துவிடும். இதனை பாதுகாப்பான ஒரு டைரக்டரியில் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.


அங்கிருந்தவாறே இதற்கான செட் அப் பைலை இயக்கினால் விண் ஆம்ப் புரோகிராம் பதியப்படும். இன்ஸ்டால் செய்திடும்போதே எந்த வகை ஐகான் இருக்க வேண்டும், எந்த வகை பார்மட் பைல்களை இது இயக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுத்து இன்ஸ்டால் செய்திடலாம். உங்கள் இன்டர்நெட் கனெக்ஷன் எப்படிப்பட்டது என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தர வேண்டும். பின்னர் விண் ஆம்ப் புரோகிராமின் தோற்றத்தை முடிவு செய்திடும் "ஸ்கின்' என்பதையும் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். இன்ஸ்டால் செய்துவிட்டால் புரோகிராம் இயங்குவதற்கு ரெடியாகிவிடும்.

உங்கள் டெஸ்க் டாப்பில் விண் ஆம்ப் ஷார்ட் கட் ஐகான் ஒன்று உருவாக்கப்பட்டு பதியப்பட்டிருக்கும். இதனைக் கிளிக் செய்தால் விண் ஆம்ப் இயங்கத் தயாராயிருக்கும். முதன் முதலில் விண் ஆம்ப் தயாராகும் போது யூசர் இன்பர்மேஷன் விண்டோவினைக் காணலாம். இதில் Do not ask me again until next install என்ற இடத்திலும் Later என்பதிலும் கிளிக் செய்திடவும். இப்போது Media to Library என்பதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் பாடல்கள் மற்றும் வீடியோ பைல்கள் உள்ள இடங்களைச் சுட்டிக் காட்டலாம். இதன் மூலம் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மீடியா பைல்கள் அனைத்தையும் கொண்ட லைப்ரேரி ஒன்றை உருவாக்க இடம் அளிக்கிறோம். இது வேண்டாம் என்றால் Do not show me this again என்பதில் கிளிக் செய்து வெளியேறலாம். விண் ஆம்ப் புரோகிராமில் Playlist Editor, Media Library and Video என்ற பகுதிகளும் உள்ளன. இவற்றைத் தேவைப்படும்போது இயக்கி விரித்துப் பார்க்கலாம்.


விண் ஆம்ப் பல வகையான பார்மட்களில் உள்ள மீடியா பைல்களை இயக்கும் திறன் கொண்டதாக உள்ளது. எடுத்துக் காட்டாக ஆடியோ என எடுத்துக் கொண்டால் .wav .mp3 போன்ற பல வகை பைல்களை இயக்கும் திறன் கொண்டது. ஒரு பாடல் பைலை பாட வைக்க வேண்டும் என்றால் அதற்குப் பல வழிகள் உள்ளன. கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்களைத் தேர்ந்தெடுத்து போல்டர்களில் உள்ள பாடல் பைலைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது அந்த பைலின் மீது இரு முறை கிளிக் செய்தால் பாடல் வடிவத்தினை ஏற்கனவே இன்ஸ்டால் செய்திடும்போது அமைத்து விட்டதால் உடனே விண் ஆம்ப் திறக்கப்பட்டு பாடல் இயக்கப்படும்.

இன்னொரு வழியும் உண்டு. பிளே லிஸ்ட் எடிட்டர் என்பதில் கிளிக் செய்து ஒரு பட்டியலைத் தயார் செய்திட வேண்டும். இதில் கிளிக் செய்தால் புதிய லிஸ்ட்டுக்கான பெயர் கேட்கப்படும். இதில் யாருக்காக அல்லது எந்த வகை பாடல்கள் என எந்த பெயரை வேண்டு மென்றாலும் வைத்துக் கொள்ளலாம். இந்த லிஸ்ட்டின் பெயரில் கிளிக் செய்து அதன் பின் பாடல்கள் உள்ள டைரக்டரியிலிருந்து இதில் நீங்கள் விரும்பும் பாடல்களைக் கொண்டு வந்து அவை பாடப்பட வேண்டிய வரிசைப்படி அடுக்கலாம். அதன் பின் எப்போது வேண்டுமானாலும் இந்த பிளே லிஸ்ட்டை திறந்து பாடல்களைக் கேட்கலாம். இந்த லிஸ்ட் பிடிக்கவில்லை என்றால் பாடல் பைல்கள் உள்ள டைரக்டரியைத் திறந்து எந்த எந்த பாடல்கள் இசைக்கப்பட வேண்டுமோ அவற்றை கண்ட்ரோல் அழுத்தி முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். செலக்ட் ஆன பின்னர் அதன் மீது ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Add to play List என்று கிடைக்கும். இதனைத் தேர்ந் தெடுத்தால் அவை பிளே லிஸ்ட்டில் சேர்க்கப்படும் ; அல்லது இசைக்கப்படும்.


விண் ஆம்ப் .MPEG மற்றும் .AVI போன்ற வீடியோ பைல்களையும் இயக்கும். வீடியோ பைல்களையும் மேலே ஆடியோ பைல்களை இயக்க குறிப்பிட்ட வழிகளிலேயே இயக்கலாம். அல்லது பைலின் பெயர் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Play in Winamp என்பதில் கிளிக் செய்தால் பைல் விண் ஆம்ப் புரோகிராமில் இயங்கி ஆடல் பாடலைக் காட்டும்.

திறக்கப்படும் வீடியோ விண்டோவில் ரைட் கிளிக் செய்தால் விண்டோவின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அதன் மூலைகளில் கர்சரை வைத்து இழுத்து அமைப்பதன் மூலம் அமைக்கலாம். பிளே லிஸ்ட்டில் என்ன என்ன பாடல்களைத் தொகுத்து வைத்திருக்றீர்கள என அச்சிட்டு பார்க்க விரும்புகிறீர்களா? இதில் தெரியும் Misc என்ற பட்டனை அழுத்தவும். இதில் Generate HTML playlist என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது வெப் பிரவுசர் ஒன்றின் விண்டோ திறக்கப்பட்டு அதில் பிளே லிஸ்ட்டில் உள்ள பாடல் மற்றும் ஆடல் பைல்கள் காட்டப்படும். பின் வழக்கம்போல் File மெனுவினைத் திறந்து அதில் Print என்பதைத் தேர்ந்தெடுத்து பிரிண்ட் செய்திடலாம். விண் ஆம்ப் புரோகிராமை நீங்கள் மூடிப் பின் திறக்கும்போது இறுதியாக எந்த பிளே லிஸ்ட்டை இயக்கிக் கொண்டிருந்தீர்களோ அந்த பிளே லிஸ்ட் திறந்தபடி விண் ஆம்ப் திறக்கப்படும்.


விண் ஆம்ப் புரோகிராம் முதலில் நல்சாப்ட் (Nullsoft) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன் பின் அதனை ஏ.ஓ.எல்.நிறுவனம் வாங்கி யது. தற்போது மீண்டும் அது நல்சாப்ட் நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப் பட்டு அதன் வசமே இருக்கிறது. விண் ஆம்ப் புரோகிராம் 1997ல் ஜஸ்டின் பிராங்கெல் என்பவரால் ஷேர்வேர் புரோகிராமாக வெளியிடப் பட்டது. அதன்பின் இதில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப் பட்டன. தற்போது ஸ்ட்ரீமிங் வீடியோ இயக்கும் வகையில் உயர்ந்துள்ளது. நல்சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மாதந்தோறும் 6.5 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வகையில் உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் மீடியா பிளேயர்களில் மூன்றாவது இடத்தை விண் ஆம்ப் பெற்றுள்ளது.


சிறப்பு அம்சங்கள்


* மிகச் சிறிய அளவிலான பைலாக இதனை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். Lite 1.2 MB, Full 5 MB மற்றும் Bundle 12 MB என மூன்று அளவுகளில் இது முதலில் தரப்பட்டது. இப்போது Full– 9.08 MB, Free+ Bonus MP3 12.2.MB என்ற அளவில் இலவசமாகக் கிடைக்கிறது. கட்டணம் செலுத்தி சில கூடுதல் வசதிகள் உள்ள புரோகிராமினையும் பெறலாம்.


* விண் ஆம்ப் புரோகிராமிற்காகத் தரப்படும் ஸ்கின்கள் அனைவரும் பேசப்படும் வகையில் மற்றவற்றிலிருந்து வேறுபடும்.

* ஆடியோவில் பல வகைப் பார்மட்டுகளைக் கையாள்கிறது. MP3, WMA, M4A/AAC, OGG, FLAC MIDI, MOD, MPEG1 என்ற பார்மட்டுகளைக் கையாள்வதுடன் இவற்றிடையே மாற்றிக் கொள்ளும் வசதியையும் அளிக்கிறது. வீடியோ பைல்களைப் பொறுத்த வரை AVI,ASF,MPEG,NSV ஆகிய பார்மட்டுகளைக் கையாள்கிறது. பலவகையான இன்டர்நெட் ரேடியோ ஸ்டேஷன்களைப் பெறலாம்.

* தற்போது விண் ஆம்ப் லேட்டஸ்ட் பதிப்பாகக் கிடைக்கிறது. இதனையும் இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். இதில் ஐபாட் சாதனத்துடன் டேட்டாவினை இணைக்கும் வழிகள் தரப்பட்டுள்ளன. புதிய ஐ –ட்யூன் லைப்ரேரியை இறக்கிப் பயன்படுத்தலாம். புதிய ஆன்லைன் சர்வீஸ் காலரி தரப்பட்டுள்ளது.

 தகவல்:தகவல் தொழில்நுட்பம்

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பரிடம் பகிர்வது எப்படி?

டீம் வியூயர்(TeamViewer)

* Remote Support
* Presentation
* File transfer
* VPN

இவை எல்லாவற்றையும் நமக்கு மிக எளிதாக அளிக்கிறது.


 இதை நமக்கு தேவையான பயன்பாடுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.


High Security வழங்கிறது.நம் கணினி மற்றும் இனைய இணைப்பை பொருத்து வேகம் இருக்கும்.

www.teamviewer.com இங்கு சென்று இதன் இலவச பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் கணினியை மற்ற கணினி உடன் இணைக்கும் பொழுது. உங்கள் teamviewer ID மற்றும் Password-ய் தெரியப்படுத்தி இணைத்து கொள்ளலாம்.

Teamviewer Install செய்த பின்பு Open செய்து 1நிமிடம் காத்திருந்தால் ID மற்றும் Password கிடைக்கும்.

(ID மற்றும் Password உதாரணத்திற்கு படத்தினை பார்க்கவும் )

GMail - அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த

அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த

ஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும். 

மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது.

சென்ட்(Send) பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ ( உண்டோ )  பட்டனை அழுத்த வேண்டும்.
ஏனென்றால் ஜிமெயில்  5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் தொடங்குகிறது.

ரத்து செய்யத் தரப்படும் இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது.  

30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது.
30 விநாடிகள் ஏன்? என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30  நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Send என்று சென்று மாற்றவும்.


 

Sunday, March 7, 2010

உண்மையான மகான் எப்படி இருப்பார்?

இந்த தேசத்தில் மனித தெய்வங்கள் அதிகம். அதிலும் சமீப காலங்களில் நான் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மனித தெய்வங்களை நாம் மேலும் அதிகமாகப் பார்க்க முடிகிறது. திருவள்ளுவர் மழித்தலும், நீட்டலும் வேண்டா என்றார். அது முக்கியமல்ல என்பது அவர் கருத்து. ஆனால் பார்க்க மற்ற மனிதர்களைப் போலவே தோற்றம் இருந்தால் அவர்கள் வந்து வணங்குவார்களா? எனவே மழித்தல், நீட்டல், ஆசிரமம் வைத்தல், மேஜிக் காட்டுதல், கூட்டம் சேர்த்தல் என்று பல வழிகளிலும் முயன்று கோடிக்கணக்கில் இந்த தெய்வங்கள் காசு பார்க்கின்றன. புகழ் தேடுகின்றன.


அடுத்ததாக மகான்கள். கடவுள் என்று சொல்லிக் கொள்வது "ரொம்பவும் ஓவர்" என்று தீர்மானித்து அதற்கு அடுத்த நிலையை ஏற்படுத்திக் கொண்ட கூட்டம் இது. இவர்கள் பல சித்திகள், மகாசக்திகள் தங்களுக்கு இருப்பதாக பிரகடனப்படுத்திக் கொண்டு மேலே சொன்ன தெய்வங்களைப் போலவே தாங்களும் 'உழைத்து' கோடிக் கணக்கில் செல்வம் சேர்க்கின்றன.


ஆனால் உண்மையான மகான்கள் பெரும்பாலும் நம் கவனத்திற்கு வராமலேயே இருக்கிறார்கள். மற்றவர் வணக்கம், புகழ், பணம் என எதுவும் அவர்களுக்குத் தேவையில்லாததால் அவர்கள் எந்த பிரகடனமும் செய்வதில்லை. நம்முடைய அங்கீகாரமோ, அலட்சியமோ அவர்களைப் பாதிப்பதில்லை. தங்களுடைய ஞானத்தை வஞ்சனையின்றி மக்களுக்கு வழங்கிய வண்ணம் வாழும் அவர்கள் எந்த பிரதிபலனையும் எவரிடத்தும் எதிர்பார்ப்பதில்லை.


போலிகளையே அதிகம் கண்டு பழக்கப்பட்ட நமக்கு உண்மை எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளம் காட்ட ரமண மகரிஷி இருந்திருக்கிறார்.


இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியேயும் பிரபலமாக இருந்தாலும் துளியும் கர்வமில்லாது, சலனப்படாமல் ஜீவன்முக்தனாக வாழ்ந்து மறைந்த ரமண மகரிஷி அப்படிப்பட்ட ஞானி. தன்னிடம் மேலான சக்திகள் இருப்பதாக எப்போதும் அவர் காட்டிக் கொண்டதில்லை. யாரையும் விட தான் உயர்ந்தவன் என்பதை சூசகமாகக் கூட அவர் தெரிவித்ததில்லை.


திருச்சுழியில் வெங்கடரமணனாகப் பிறந்த ரமண மகரிஷி ஆன்மீகத் தேடலில் திருவண்ணாமலைக்கு இளம் வயதிலேயே வந்து விட்டார். ஆரம்பத்தில் இருந்தே அதிகம் பேசாமல் மோன நிலையில் அமர்ந்திருக்கும் ரமணர் பால் ஈர்க்கப்பட்ட சிலர் அவரிடம் திரும்பத் திரும்ப வர ஆரம்பித்தார்கள். அவருடைய ஞான சக்தி சிறிது சிறிதாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பலரையும் வர வைத்தது. ·ப்ராங்க் ஹம்ப்ரீஸ் (Frank H.Humphreys) என்ற ஆங்கிலேயர் வந்து ரமண மகரிஷியால் வசீகரிக்கப்பட்டு, ரமணாசிரமத்தில் சில நாட்கள் தங்கி மகரிஷியிடம் உபதேசம் பெற்று அதை எழுதி லண்டனில் வசிக்கும் தன் நண்பனுக்கு அனுப்ப அவர் அதை The International Psychic Gazetteல் 1911ஆம் ஆண்டு பிரசுரித்தார். சிறிது சிறிதாக அவர் புகழ் மேலை நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. வெளிநாட்டிலிருந்தும் அவரைத் தரிசிக்க பலர் வர ஆரம்பித்தனர்.


ஒரு முறை ரமண மகரிஷி மரத்தடியில் அமர்ந்து சந்திக்க வந்தவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவரைத் தரிசிக்க வந்த ஒரு வெளிநாட்டு அன்பர் காலை மடித்து நம்மைப் போல் கீழே உட்கார முடியாததால் வேகமாகச் சென்று வெளியே போட்டிருந்த ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டு வந்து அதில் உட்கார்ந்து கொண்டார். ரமணரை விட உயரமான இடத்தில் அவர் அமர்வது ஆசிரம நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அந்த மனிதரிடம் ஏதோ சொல்ல அவர் வெளியேறி விட்டார்.


இதைக் கவனித்த ரமணர் என்ன என்று விசாரிக்க அவர்கள் "உங்களை விட உயரமான இடத்தில் உட்கார வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்" என்று சொல்ல ரமணர் மரத்தில் அமர்ந்திருந்த ஒரு குரங்கைக் காண்பித்து "இதுவும் என்னை விட உயரத்துல தானே இருக்கு.. இதை என்ன செய்யப் போறீங்க?" என்று வேடிக்கையாகக் கேட்டு "இதில் உயர்வென்ன, தாழ்வென்ன" என்று சொன்னார்.


தன்னை அவர் என்றுமே உயர்த்திக் கொண்டதில்லை. தன்னை முன்னிலைப் படுத்த அவர் முயன்றதுமில்லை. ஒரு முறை அவர் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட நினைத்த அன்பர்கள் அவரிடம் அனுமதி கேட்டனர். "பிறந்த நாள் தெரிந்தால் தானே கொண்டாடறதுக்கு" என்று ரமணர் மறுத்து விட திருச்சுழியில் அவர் பிறந்த நாளை அவர்கள் கண்டு பிடித்துக் கேட்டனர். ரமணர் சிரித்தபடி சொன்னார். "இது இந்தப் பிறவி. முதல் பிறவி எப்ப ஆரம்பிச்சது என்று தெரிந்து கொண்டாடுவது தானே நியாயம். அது தானே உண்மையான பிறந்த நாள்"


சமையலுக்காக காய்கறிகளை சுத்தம் செய்து அரிந்து தருவது, பக்தர்களின் ஆன்மீகப் படைப்புகளைப் பிழை திருத்துவது என்று எந்த வேலையானாலும் உயர்வு தாழ்வு பார்க்காமல் செய்யக் கூடியவராக ரமணர் விளங்கினார். வெளிப்புற தோற்றத்தில் மற்றவர்களை விடப் பெரிய வித்தியாசம் இல்லா விட்டாலும் அவர் கண்களில் ஞான தீட்சண்யமும், அவரைச் சுற்றி சக்தி அலைகளும் இருந்ததாக சந்தித்தவர்கள் கூறுகிறார்கள்.


பல சமயங்களில் அவரைக் காண வந்தவர்கள் தங்கள் கேள்விகளுக்கான பதில்களை அவரிடம் கேட்காமலேயே அவர் முன்னிலையில் விடைகளை உணர்ந்தனர். எண்ண அலைகளாலேயே அவற்றைப் பெற முடிந்தவர்களுக்கு பதிலளிக்கும் சக்தி அவருக்கு இருந்ததாக உள்நாட்டு வெளிநாட்டு அன்பர்கள் கூறுகின்றனர். இதை பால் பிரண்டன் (Paul Brunton) என்ற மேலை நாட்டு தத்துவஞானியும் ரமணரிடம் தன் அனுபவமாக ஒரு நூலில் (A search in secret India) எழுதினார்.


அந்த நூலில் ரமண மகரிஷியின் பக்தர்களுள் ஒருவரான யோகி ராமையா என்பவருடன் தனக்கேற்பட்ட அனுபவத்தையும் பால் பிரண்டன் குறிப்பிட்டுள்ளார். கொடிய விஷம் கொண்ட பெரிய பாம்பு ஒன்று பால் பிரண்டன் அறையில் வந்து விட பலரும் அதை அடிக்க கம்புகளை எடுக்க விரைந்த போது ராமையா அவர்களைத் தடுத்து நிறுத்தி அந்த பாம்பை தன் கைகளால் மெல்ல எடுத்து அதைத் தடவிக் கொடுக்க அதுவும் சீற்றத்தை அடக்கி சாந்தமாகி விட ராமையா அதைக் கீழே இறக்கி விட்டதாகவும், அந்த பாம்பு அங்கிருந்து யாருக்கும் எந்தத் தொந்திரவும் செய்யாமல் போய் விட்டதாகவும் பால் பிரண்டன் குறிப்பிடுகிறார்.


பால் பிரண்டன் பிறகு பயமாக இருக்கவில்லையா என்று ராமையாவிடம் கேட்டாராம். நான் அதை அன்புடன் அணுகுகையில் அது என்னை ஏன் துன்புறுத்தப் போகிறது என்று ராமையா சொன்னாராம். அந்த அளவு பண்பட்ட யோகிகளும், ஞானிகளும் கூட ரமணரின் பக்தர்களாக இருந்தார்கள் என்றால் ரமணரைப் பற்றி இனி என்ன சொல்ல?


அவருடைய இறுதிக் காலத்தில் இடது தோளில் கட்டி ஒன்று வந்து பெரிதாகத் தொடங்கியது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னும் அது குணமாகவில்லை. அதையும் கூட மகரிஷி பற்றில்லாமல் கவனிக்கலானார். மற்றவர்கள் துக்கப்பட்டபோது தான் அந்த உடல் அல்ல என்றும், உடல் அதன் இயற்கையான முடிவுக்கு வருவதில் வருந்த ஒன்றுமில்லை என்றும் புன்னகையுடன் கூறினார். சிலர் மகரிஷி தன் தவசக்தியால் அதைக் குணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதும், சிலர் தங்களுக்கே அந்த சக்தி உள்ளது என்று மகரிஷியைக் குணப்படுத்த முயன்ற போதும் அவர்களைப் புன்னகையோடு பார்த்தாரே தவிர வேறொன்றும் செய்யவில்லை. கீதையில் கிருஷ்ணர் சொன்ன ஸ்திதப்ரக்ஞனும், குணாதீனனும் இவரல்லவோ.


ரமண மகரிஷியின் அருளுரைகளில் சில -


* ஒவ்வொரு எண்ணத்தையும் அதன் மூலத்திற்கே கொண்டு செல்லுங்கள். எண்ணங்கள் மேன்மேலும் ஓட அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்தால் அதற்கு முடிவே இல்லை. மறுபடியும் மறுபடியும் உற்பத்தி ஸ்தானத்திற்கே அழைத்துச் சென்றால் மனம் செயலற்று இறந்து போகும்.


* சித்திகள் உண்மையான ஞானத்தின் அடையாளமல்ல. சமத்துவமே உண்மையான ஞானத்தின் அடையாளம். சமத்துவம் என்பது வேறுபாடுகளை மறுப்பதன்று. மாறாக ஒன்று படும் ஏகத்துவத்தை உணர்தல்.


* மூலமாம் இதயத்தில் அகந்தை கரைதலே உண்மையான சரணாகதி. வெளிச்செயல்களால் கடவுளை ஏமாற்ற முடியாது. அவர் பார்ப்பதெல்லாம் இன்னும் எவ்வளவு அகந்தை பலமாக எஞ்சி நிற்கிறது என்பதும், எவ்வளவு அழியும் நிலையிலிருக்கிறது என்பதும் தான்.


* ஆத்மஞானத்தையே நான் வலியுறுத்துகிறேன். நம்மை அறிந்த பின்னரே உலகையும் கடவுளையும் அறிதல் வேண்டும்.... ஆத்மாவைத் தேடி ஆழ்ந்துசெல்லச் செல்ல உண்மை ஆத்மா உங்களை உள்ளிழுக்கக் காத்திருக்கிறது. பின் செய்ய வேண்டியவற்றை எல்லாம் வேறு ஏதோ ஒன்று செய்கிறது. உங்களுக்கு அதில் பங்கு இல்லை.
 நன்றி: விகடன்

இறைவன் எந்த மதத்தவன்?

இறைவன் இருக்கிறான் என்பதை நம்பாதவர்கள் கூட மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். கோடானு கோடி உயிர்கள், உலகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் நம் கற்பனைக்கும் எட்டாத அண்டவெளியில் துல்லியமாக இயங்கிக் கொண்டிருக்கிறன என்பதைப் பார்க்கும் போது அதை இயக்குகின்ற ஒரு மாபெரும் சக்தி இருக்கத்தான் வேண்டும் என்பதை நாத்திகர்களாலும் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இன்று அந்த இறைவனைத் தங்கள் மதத்தவராக பல மதத்தவரும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அவன் பெயரால் தர்மங்களும் நடக்கின்றன. அதர்மங்களும் நடக்கின்றன. இறைவனின் பெயரால் யுத்தங்களும், சண்டைகளும் சர்வசகஜமாக நடப்பதை வரலாறு பதிவு செய்கிறது. கடவுளின் பெயரால் மனிதர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். செத்து மடிகிறார்கள்.

உண்மையில் இறைவனுக்கு என்று ஒரு மதம் இருக்கிறதா? இருந்தால் இறைவன் எந்த மதத்தவன்? பல மதங்கள் தங்களுடையவன் என்று உரிமை கொண்டாடுகின்றனவே, உண்மையில் பல மதக் கடவுள்கள் இருக்கின்றனரா?

பல மதக் கடவுள்கள் இருந்திருந்தால் இந்த உலகில் இன்று நடைபெறும் மதச்சண்டைகள் போல கடவுள்களுக்கும் யார் சிறந்தவன் என்ற போட்டி ஏற்பட்டு இருக்கும். அண்ட சராசரங்கள் ஸ்தம்பித்துப் போய் இருக்கும். அது இது வரை நிகழவில்லை, பிரபஞ்சம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் பல மதக் கடவுள்கள் இருக்க வாய்ப்பேயில்லை. எனவே இறைவன் ஒருவனாக அல்லது ஒரே சக்தியாகத் தான் இருக்க முடியும் என்று சுலபமாகக் கணிக்க முடிகிறது.

இருப்பது ஒரு இறைவன் என்றால் அவன் ஒரு மதத்தவனாக இருக்க முடியுமா? அப்படி ஒரு மதத்தவனாக இறைவன் இருந்திருந்தால் அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஓஹோ என்று சுபிட்சமாகவும், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க மற்ற மதத்தினர் எல்லாம் கீழான நிலைகளிலும், சொல்லொணா கஷ்டங்களுடன் இருக்க வேண்டும். அது தான் லாஜிக்காகத் தெரிகிறது. ஆனால் இன்றைய உலகில் எல்லா மதத்திலும் சுபிட்சமாக உள்ளவர்களும் இருக்கிறார்கள், எதிர்மாறாக மிகவும் கஷ்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது இறைவன் ஒரு மதத்தைச் சார்ந்தவன் என்ற நிலைபாடும் அடிபட்டுப் போகிறது.

இருப்பது ஒரு இறைவன், நாமெல்லாரும் அவன் சிருஷ்டிகள் என்றால் மதம் என்ற பெயரிலும், தங்கள் கடவுள் என்ற பெயரிலும் மனிதர்கள் சண்டை போடுவது எதற்காக?

ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை – டாக்டர்.ருத்ரன் !

குருநாதர்கள் ! பாகம் – 1 – முடிவறம்
  
அவர்கள் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதெல்லாம் அவர்கள் திக்குத்தெரியாக் காடுகளில் கண்காணாத ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை. அவர்களுடைய வாசஸ்தலம் குகைப்பொந்துகளும் இல்லை. மலை உச்சிகளும் இல்லை. ஊடகங்கள் அனைத்திலும் அவர்கள் வாசம் செய்கிறார்கள். அவர்களைத் தேடிப்போக நீங்கள் விரும்பாவிட்டாலும் அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள். ஆம். ஆன்மீகச் சந்தை முன்னெப்போதும் இத்தனை சூடாக இருந்ததே இல்லை.




இந்தியா என்றழைக்கப்படும் உலகமயமாக்கப்பட்ட புதிய வணிகமாயையில் இந்தக் கில்லாடி குருநாதர்கள் ஒரு வளமான சந்தையைக் கண்டுகொண்டார்கள். விற்பனைக்கான சரக்கு அவர்களிடம் தயாராக இருக்கிறது. அதற்கேற்ப தேவையையும் அவர்களே உருவாக்கி விடுகிறார்கள். இத்தகையதொரு குருநாதரை உற்பத்தி செய்வதற்கான செலவும், அவர்களைச் சந்தைப்படுத்துவதற்கான செலவும் ஆன்மீக வாடிக்கையாளர்களின் பில்லில் சேர்க்கப்பட்டுவிடும். அதனாலென்ன, குருநாதர்களின் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. இந்த வியாபாரத்திற்கு ஆன்மீகத் தணிக்கையும் கிடையாது. லவுகீகத் தணிக்கையும் கிடையாது. வாடிக்கையாளர் கூட்டமோ அதிகரித்தபடியே இருக்கிறது.


முன்னொரு காலத்தில் இந்த ஆன்மீகப் பச்சடியின் ருசிகனாக இருந்தவன் என்ற முறையிலும், “இந்த ஆன்மீகச் சந்தையில் நாமும் குதித்தாலென்ன” என்று இதனைக் கூர்ந்து கவனித்த பொறாமையும் கூச்சமும் கொண்ட தொழில்முனைவன் என்ற முறையிலும் இந்த ஆட்டத்தை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். முழுமையாக கவனித்து வருகிறேன் என்றும் சொல்ல்லாம். ஆன்மீக வியாபாரத்தில் நுழைவது என்ற இந்தச் சவாலுக்குள் நுழையவிடாமல் என்னைத் தடுத்த்து வேறெதுவும் இல்லை. என்னுடைய இயல்புதான். இயல்பு என்றால், சுயமரியாதை குறித்துத் தெளிவு கொண்ட என் இயல்பு. கண்ணாடியில் முகம் பார்த்து வெட்கப்பட நேரும் அபாயம் குறித்து அஞ்சும் என் இயல்பு. ஆக, இந்தத் தொழிலில் குதிக்கவொட்டாமல் என் இயல்பே என்னைத் தடுத்துவிட்டது. அந்த வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் இதை எழுதுகிறாயா என்று கேட்கிறீர்களா, இருக்கலாம்.


இன்றைக்கு இந்தத் தொழிலில் முன்னணியாக இருக்கும் குருநாதர்களுக்கு முகத்தில் எவ்வளவு முடி இருக்கிறதோ, அதற்கு மயிரளவும் குறையாமல் எனக்கும் முகம் நிறைய முடி இருக்கிறது. எனவே இந்தத் தகுதியைப் பொறுத்தவரை நான் தேர்வில் நான் பாஸ் ஆகி விட்டேன். ஆனால் குருநாதர் ஆவதும், குருநாதராகத் தொடர்ந்து நீடிப்பதும் வெறும் முடிவறம் அல்லவே.! (முடிவறம் என்ற சொல்லின் பொருள் என்ன என்று திகைககிறீர்களோ!  குருநாதர்களைக் கூர்ந்து கவனித்து வந்த ஆதி நாட்களில் நான் கற்றுக்கொண்ட தந்திரங்களில் இதுவும் ஒன்று. அன்றாட வாழ்வின் உப்புச் சப்பில்லாத விசயங்களைப் பற்றிப் பேசும்போது, புரியாத மொழியில் புதிரான சொற்களைப் பயன்படுத்த வேண்டும். அதனால்தான் வெறும் முடி சமாச்சாரம் என்று சொல்லியிருக்க வேண்டிய அற்ப விசயத்தை முடிவறம் என்று குறிப்பிடுகிறேன்.)


இந்தத் தொழிலில் இறங்குவது குறித்து நான் தீவிரமாக யோசித்து வந்தேன் என்ற காரணத்தினால், சந்தையில் விற்பனையாகும் குருநாதர்களைப் பல ரகங்களாக வகைப்படுத்தியிருக்கிறேன். முதலாவதாக இத்தகைய குருநாதர்களை பேசுபவர்கள், பேசாதவர்கள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். முடி விசயத்தைப் பொருத்தவரை அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வளர்கிறதா, நல்லது. வளர மறுக்கிறதா, பரவாயில்லை. மழுங்கச் சிரைத்து விடலாம். முகத்தை மட்டுமல்ல, தலையையும். உங்கள் தலையை நீங்கள் மொட்டையடித்துக் கொள்கிறீர்கள், அடுத்தவன் தலையை மொட்டையடிக்கவில்லையே!


பேசும் குருநாதர்களைக் காப்பி அடிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியம். இந்த ரகத்தைச் சேர்ந்த குருநாதர்கள் ‘சுட்டு’ பேசுவதற்கு உதவியாக ரஜனீஷின் சரக்குகள் போதுமான அளவு இருக்கின்றன என்ற போதிலும், அதிகம் பிரபலமாகாத ஏதாவது சில மத இலக்கியங்களின் பெயர்களையாவது இத்தகைய குருநாதர்கள் தொடர்ச்சியாகப் படித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தங்களது ஞானோபதேசத்தைத் தடையின்றித் தொடர்ந்து வழங்க இது அவசியம். இது கொஞ்சம் சிக்கலான ஆட்டம்தான். இதில் கொடி நாட்ட வேண்டுமானால் முடி மட்டும் போதாது. மொழி ஆளுமையும் பேச்சுத் திறனும் வேண்டும்.
guru-p1பேசாக் குருநாதர் ஆவதற்கும் சில சிறப்புத் திறன்கள் தேவைப்படுகின்றன. கருத்தை வரவழைக்கும் கலையைக் கற்றுத் தேர்வதைக் காட்டிலும் பொருளை வரவழைக்கும் கலை எளிதில் கைவரக் கூடியதுதான். ஆனால் தங்க நகை போன்றவற்றை வரவழைக்க வேண்டுமானால் அது கொஞ்சம் சிரமம்தான். நகை சப்ளையை ரகசியமாக வைத்திருப்பதற்கு நீண்ட கால வணிக ஒப்பந்தங்கள் தேவைப்படும். அதற்கு பேரம்பேசும் திறனும் ரகசியம் குலையாத கட்டுக் கோப்பான அமைப்பைப் பராமரிக்கும் திறனும் வேண்டும். வி.ஐ.பி வாடிக்கையாளர்கள் வரும்போது வெறும் சாம்பலை மட்டும் கொடுத்து அனுப்ப முடியுமா? பகுத்தறிவாளர் என்று கூறப்படுபவரும் தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்பவருமான ஒரு பிரமுகரின் வீட்டில் நடந்ததைப் போல, மூன்று பேருக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்ததோடு மோதிர சப்ளை நின்று போகலாம். நாலாவது மோதிரத்தை எடு என்று இன்னொரு வி.ஐ.பி வந்து கழுத்தறுக்கலாம்.


நீங்கள் பேசாக் குருநாதர் வகையைச் சேர்ந்தவராக இருந்து, பொருளை வரவழைக்கும் கலையும் கைவராதவராக இருந்தால், பிரமித்து நிற்கும் பக்தர்களை நீங்கள் கட்டிப்பிடிக்கலாம், முத்தமிடலாம், காறித்துப்பலாம், உதைக்கலாம், உருளலாம். இந்த ஆட்டத்துக்கு விதியே கிடையாது. எல்லாம் செல்லுபடியாகும்.


குருநாதர்கள் என்றாலே ஆன்மீகக் கடத்திகள்தான். எனவே வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதி வேண்டும். நீங்கள் ஜென் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் முற்பிறவி மற்றும் வரும் பிறவிகள் குறித்துக் கோடி காட்டும் வகையில்தான் நீங்கள் பேசவேண்டும். நேற்றுவரை வெளித்தெரியாத, இன்று பிரத்தியட்சமாகிவிட்ட கடவுள் என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொள்ளப் பொருத்தமான தருணம் வரும் வரையிலும், வேறுவழியில்லை – குரு என்ற பட்டத்துடன் நீங்கள் நிறைவடையத்தான் வேண்டும். ஆனால் காத்திருத்தில் வீணாகிவிடுவதில்லை. உங்களுடைய சந்தைப்படுத்தும் திறன், ஆள் பிடிக்கும் திறன் ஆகியவற்றைப் பொருத்து ஓரிரு ஆண்டுகளில் கடவுளாகி விடலாம்.


முட்டாள்கள் மட்டுமே இந்த வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள் என்ற போதிலும், நாம் இதனை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க முடியாது. ஏனென்றால் இது வெறும் முடி சமாச்சாரம் இல்லையே!


இந்த இடுகையை Friday, March 6, 2009, 10:34 அன்று டாக்டர்.ருத்ரன் www.vinavu.com எழுதினார்.

வைரமுத்துவின் வைர வரிகள்...

வைரமுத்துவின் அருமையான வரிகள் .... வாழ்கையின் உன்னதைதை உணர்த்தும் ....


உயிரின் விலையைஉணர்த்த வேண்டும் உனக்கு
எழுந்திருஎன் பின்னால் வா
அதோ பார்
அபாயம் அறிந்தால்அங்குல புழுமில்லிமீடறாய்சுருள்கிறதே ! ஏன் ?
பறவையாய் இருந்தும்பறக்காத கோழிபருந்து கண்டதும்பரந்தடிகிறதே ! ஏன் ?
வலை அறுந்து நிலை குலைதும்அந்த ஒரு இழை சிலந்திஉசலாடுகிறதே ! ஏன் ?
வாழ்கைஇன்நிமிஷ நீடிப்புகுத்தான்
தம்பி ! ! !
சாவைசாவு தீர்மானிக்கட்டும்
வாழ்வைநீ தீர்மானி
புரிந்துகொள்
சுடும் வரைநெருப்பு
சுற்றும் வரைபூமி
போராடும் வரைமனிதன்
நீ மனிதன் ! ! !

Friday, March 5, 2010

கண்களைப் பேணும் காய்கறிகள்

நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.

வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

Tuesday, February 16, 2010

மொபைல் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்ற

தற்போது வீடியோ எடுக்கும் வசதி இன்றி வரும் மொபைல் போன்கள் குறைவு. உயர் தரத்தில் HD வீடியோ எடுக்கும் அளவுக்கு கூட மொபைல் போன்கள் சந்தைக்கு வந்து விட்டன.

சாதரணமாக மொபைலில் எடுக்கும் வீடியோக்களை கணினிக்கு மாற்றி பின்பு யூடியுபிற்கு மாற்று பழகி இருப்போம். இப்போது மொபைலில் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் மொபைலில் இருந்தே யூடியுபில் ஏற்றுவது எப்படி என்று பார்ப்போம். இதுவும் எளிதான ஒன்றுதான்.

இதற்கு தேவையானவை

1. யூடியுபில் ஒரு பயனர் கணக்கு
2. கேமரா வசதி உள்ள மொபைல் போன்
3. மின்னஞ்சல் அனுப்ப மொபைலில் இணைய வசதி(GPRS activated Phone)

இந்த http://www.youtube.com/account சுட்டியை கிளிக் செய்து யூடியுபில் உங்கள் பயனர் கணக்கு பக்கத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே 'Mobile Setup' என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட ஈமெயில் முகவரியை அளிக்கும்.




அதை குறித்து வைத்து கொண்டு உங்கள் மொபைல் தொடர்புகளில்(Contacts) சேமித்து கொள்ளுங்கள்.

இனி மொபைலில் வீடியோக்கள் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள். அதில் வீடியோக்களை  பார்க்கும் போது 'Send' என்று ஒரு வசதி இருக்கும். அதனை அழுத்தினால் ஈமெயில் மூலம் வீடியோவை அனுப்புவதற்கான வசதி வரும். அதன் மூலம் நீங்கள் யூடியுபில் இருந்து பெற்ற ரகசிய ஈமெயில் முகவரிக்கு வீடியோவை அனுப்பி விடுங்கள். உங்கள் வீடியோவில் அளவை பொறுத்து நேரம் பிடிக்கும்.

இப்போது நீங்கள் அனுப்பிய வீடியோ உங்கள் யூடியுப் கணக்கில் தானாக ஏற்றப்பட்டு இருக்கும். நீங்கள் அனுப்பும் ஈமெயிலில் Subject பகுதியில் கொடுப்பது வீடியோவுக்கான தலைப்பாக வரும்.

இதன் மூலம் நீங்கள் செல்லுமிடமெல்லாம் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்றி உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

Source:tvs50.blogspot.com

பிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசதி


நமது வலைப்பதிவு வேகமாக திறக்கும்படி அமைத்து இருந்தால்தான் வாசிப்பவர்கள் விரும்புவர். சில வலைப்பதிவுகள் திறக்க நேரம் பிடிக்கும் போது அவற்றை வாசிக்காமல் / தொடர்ந்து செல்லாமல் விட்டு விடுவதுண்டு. அணுகுவதற்கும் எளிமையாக இருக்க வேண்டும்.

நாம் எவ்வளவுதான் சிறப்பாக எழுதி வந்தாலும் நமது வலைப்பதிவின் வடிவமைப்பு சரியில்லாமல் இருந்தால் / திறக்க அதிக நேரம் பிடித்தால் வாசிப்பவர் நமது தளத்திற்கு தொடர்ந்து வருவதை விரும்ப மாட்டார். RSS செய்தியோடை போன்ற மாற்று வழிகளில் வாசிப்பார். அல்லது வாசிப்பதை நிறுத்தி விடுவார்.

இந்த வகையில் நமது வலைப்பதிவை வாசிக்க வருபவர்களுக்கு நல்ல வடிவ /  சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும். 'ஆள் பாதி. ஆடை பாதி' என்பதை போல மக்களை கவருவதில் ஒரு வலைப்பதிவின் வடிவமைப்பும் முக்கிய பங்காற்றுகிறது. எழுதுவதில் நேரத்தை செலவழிப்பது போல வலைப்பதிவை வடிவமைப்பதற்கும் சிறிது நேரம் ஒதுக்கலாம். சில மணி நேரங்கள் செலவழித்தாலே நமது வலைப்பதிவிற்கு நல்ல வடிவமைப்பை கொடுத்து விடலாம். 

பெரும்பாலும் நமது வலைப்பதிவின் முகப்பில் அதிக இடுகைகள் தோன்றும்படி வைத்து இருப்போம். உதாரணத்திற்கு முகப்பு பக்கத்தில் ஏழு இடுகைகள் வரும்படி வைத்து இருப்பதாக கொள்வோம். ஒவ்வொரு இடுகையும் முழுமையாக தோன்றும்.

இதனால் வரக்கூடிய பின்னடைவு என்னவெனில் உங்கள் வலைப்பதிவை வாசிப்பவர் திறக்கும் போது ஏழு இடுகைகளும் அதில் உள்ள படங்களும் தோன்றுவதற்கு அதிக நேரம் பிடிக்கும். கடைசியாக உள்ள ஏழாவது இடுகையை பார்க்க வேண்டுமெனில் வாசிப்பவர் ஸ்குரோல் (Scroll) செய்தே ஓய்ந்து போவார்.

பிளாக்கரில் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க வசதி


நமது இடுகைகளை வாசகர்களுக்கு பிடிஎப் கோப்பாக வழங்குவது மூலம் நமது எழுத்துக்களை மேலும் சிலரிடம் கொண்டு சேர்க்க முடியும். அதனை உங்கள் வலைப்பதிவில் நிறுவுவது எப்படி? என்பதனை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.

வாசிப்பவருக்கு ஓர் இடுகை பிடித்துப் போனால் அந்த இடுகையை தனது கணினியில் வாசிப்பிற்காக சேமித்து கொள்ள விரும்புவார். இணைய உலாவிகளில் இணையப் பக்கத்தை சேமிக்கும் போது இணைய பக்கம் தனியாகவும், அதில் உள்ள படங்கள் தனியாகவும் சேமிக்கப்படும். இடுகைப் பக்கத்தின் பல பகுதிகள் முழுமையாக சேமிக்கப்படாது. இப்படி சேமிக்கப்பட்ட HTML பக்கங்களை அவர் இணைய இணைப்பு இல்லாத ஒரு நண்பருடன் பகிர்ந்து கொள்ளுவது சற்றே சிக்கலான விஷயம்.

இதற்கு பதிலாக நமது இடுகைப் பக்கத்தை ஒரே கோப்பாக PDF வடிவில் கொடுத்தால் அவருக்கு எளிமையாக இருக்கும். அந்த கோப்பை அவர் மற்றவருடன் பகிர்வதன் மூலம் உங்கள் இடுகை பலரை சென்றடையும். இணைய பரிச்சயம் இல்லாதவர் கூட உங்கள் இடுகைக்கான PDF கோப்பை வாசித்து கொள்ள முடியும்.

இணையப்பக்கங்களை பிடிஎப் கோப்பாக சேமிப்பது பற்றி ஒரு இடுகை எழுதி இருந்தேன். படிக்கவும். அதன் மூலம் எந்த இணையப் பக்கத்தையும் கணினியில் பிடிஎப்பாக சேமித்து கொள்ளலாம். உங்கள் பதிவுக்கு வரும் அனைவரும் இந்த வசதி பற்றி அறிந்து இருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.

அதனால் உங்கள் பதிவின் ஒவ்வொரு இடுகையின் கீழும் பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதியை அளித்து விட்டால் உங்கள் வாசகர்களுக்கு எளிதாக இருக்கும். நமது இந்த TVS50 வலைப்பூவின் ஒவ்வொரு இடுகையின் கீழும் 'தொடர்புள்ள இடுகைகள்' பகுதிக்கு கீழே பாருங்கள்.  'Download As PDF' என்ற வசதி இருக்கும்.


உங்கள் பிளாக்கர் வலைப்பதிவில் இந்த வசதியை கொண்டு வர உங்கள் வலைப்பதிவின் வார்ப்புரு நிரலில் சில வரிகளை சேர்த்தால் போதுமானது. உங்கள் பிளாகரின் டாஷ்போர்டு சென்று Layout --> Edit HTML கிளிக் செய்து கொள்ளுங்கள். தோன்றும் பக்கத்தில் 'Expand Widget Templates' என்ற ஆப்சனையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

கிடைக்கும் வார்ப்புரு நிரலில்  என்ற வார்த்தையை தேடுங்கள். அதன் கீழே, கீழ்காணும் வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.

Download As PDF

இப்போது 'Save Template' கிளிக் செய்து உங்கள் வார்ப்புருவை சேமித்து கொள்ளுங்கள். வேலை முடிந்தது.

இனி உங்கள் ஒவ்வொரு இடுகையின் கீழேயும் பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF' என்ற சுட்டியாக வழங்கப்பட்டு இருக்கும். அந்த சுட்டியை கிளிக் செய்யும் போது உங்கள் இடுகைப்பக்கம் பிடிஎப் கோப்பாக கணினியில் தரவிறக்கப்படும்.



Source: tvs50.blogspot.com